districts

குடிநீரை உறிஞ்சிய மின் மோட்டார்கள் பறிமுதல்

கடலூர், ஏப். 7- கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதிரிக்  குப்பம் ஊராட்சியில் உள்ள கூத்தப்பாக்கம் பகுதிகளில் வீட்டு குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை மின் மோட்டார் மூலம் அளவுக்கு அதிகமாக எடுத்து வருகின்றனர். குறிப்பாக சக்தி நகர், பங்காரு ராஜா நகர், விஜயலட்சுமி நகர், பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டுக் குடிநீர் குழாயில் மின்மோட்டார் பயன் படுத்துவதாக ஊராட்சி மன்றத் தலைவருக்கு புகார் வந்தது. அதன்பேரில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜல்லி சரவணன், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 10க்கும் மேற்பட்ட வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் குழாயில் மின்மோட்டார் மூலம் அதிகமான தண்ணீரை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீடுகளில் இருந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அதோடு வீட்டு உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.