கடலூர், மே 17- கடலூரில் சுபஉப்பல வாடி, நாணமேடு உள்ளிட்ட 3 கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். வங்கக் கடலில் உருவான அதானி புயல் சின்னம் காரண மாக கடலூர் மாவட்ட கடலோர பகுதியில் அதிக அளவு சீற்றம் காணப் பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பரலாக மழையும் பெய்தது. அதன் பின்னர் மழை இல்லை என்றா லும் வெயில் வறுத்து எடுத்து வரும் நிலையில் கடலின் சீற்றம் குறையவில்லை. தென்பெண்ணை ஆற்றின் முககத்துவாரமாக தாழங்குடா, சுப உப்பலவாடி, நாணமேடு கிராமங்கள் உள்ளது. இந்த கிராம பகுதியில் மழை காலங் களில்தான் அதிக அளவு தண்ணீர் வரத்து இருக்கும். அப்போது ஆற்று நீர் கிராமங்களை சூழந்து காணப்படும். ஆனால் தற்போது வழக்கத்துக்கு மாறாக கோடை காலத்தில் அதிகளவு கடல் சீற்றம் உள்ளதால் ராட்சத அலை கள் சுமார் 30 அடி தூரம் முன்னோக்கி வருகிறது. பொதுவாக கடலில் மண் அரிப்பை தடுக்கும் வகை யில் சவுக்கு மரங்கள் இந்த பகுதியில் நடப்பட்டிருந் தும் இந்த தோப்பை தாண்டியும் தண்ணீர் வருவதால் மரங்கள் கீழே விழுந்த வண்ணம் உள்ளது. மேலும், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தால் தற்போது பயிரிடப்பட்டிருக்கும் பயறு வகைகளும் சேதமாகிவிடும் என்பதால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.