கடலூர், அக். 11- பொங்கலுக்கு மண்பானை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழி லாளர்கள் வலியுறுத்தி யுள்ளனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தி னர் மண்பானை, மண் அடுப்புகளை கொண்டு வந்தனர். அப்போது ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், தமிழர் திரு நாளாம் பொங்கல் திரு நாளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்தாண்டு முதல் புத்தாண்டில் விளைகின்ற புதிய அரிசியை புதுப் பானையில் பொங்கலிடும் மரபை போற்றும் விதமாக புதுப்பானை, மண் அடுப்பும் வழங்க வேண்டும். இதற்காக, மண்பாண்டம் தயாரிப்பவர்களிடம் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இதனால், மண்பாண்டத் தொழிலை சார்ந்து தமிழகம் முழுவதுமுள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரி வித்தனர்.