districts

நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்கக்கோரிக்கை  

கடலூர், மார்ச் 22- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியம் கரைமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா கமல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும், தினசரி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும், குழாய் இணைப்பு மூலம் வழங்கப்படும் குடிநீர் பரிசோதனை மூலம் தரம் உள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கூடுதல் ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி, ஊராட்சி மன்ற துணை தலைவர் இளைய வாணி வேல்முருகன், கவுன்சிலர் கல்யாணி ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர் நிர்வாகிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.