கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புலியூர் கிராம மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. மாதர் சங்க வட்டச் செயலாளர் சி.ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்.பிரகாஷ், டி.கிருஷ்ணன், எஸ்.ஜெயமணி (விவசாயத் தொழிலாளர் சங்கம்), மாதர் சங்கத்தின் வி.மேரி, கே.அன்புச்செல்வி (மாதர் சங்கம்), ஆர்.கலைச்செல்வன், என்.எஸ்.அசோகன், பி.செந்தில் கே.சேகர் (சிபிஎம்), கே.செல்வகுமார், ஆர்.மாரிமுத்து (விவசாயிகள் சங்கம்), கே.சின்னத்தம்பி, டி.பரமசிவம் (வாலிபர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.