கடலூர், ஜூன் 23 - கடலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளியளவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் கட்டுரை, கிளாசிக் கல் நடனம், கிராமிய நடனம், ஓவியம், நாடகம், வில்லுப் பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலும், அதனைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அள வில் போட்டிகள் நடத்தப் பட்டது. இதில் மாவட்ட அளவி லான போட்டியில் 415 மாணவர்கள் வெற்றி பெற்றனர். மேலும் மாநில அளவிலான போட்டியில் 18 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் கலைத் திரு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் சனிக்கிழமை நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சங்கர், விருத் தாசலம் துரை பாண்டியன், தொடக்க கல்வி அலுவலர் கள் கடலூர் சுகப்பிரியா, விருத்தாசலம் ஜெயச்சந்தி ரன், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.