districts

img

கடல் பாசி ஆராய்ச்சிக்கு காப்புரிமை

சிதம்பரம், மே 18- அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புலம், கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் மிதவை தாவரம், கடல்புல் மற்றும் கடற்பாசி ஆராய்ச்சியில் கடந்த 21 வருடங்களாகப் துறை முதல்வர் அனந்த ராமன் ஈடுபட்டு வருகிறார். அறிவுசார் சொத்துரிமை காப்புரிமைச் சட்டம், 1970-இன் படி “கடல்பாசி கலவை யானது தாவரங்களின் வளர்ச்சியைத் தூண்டுவ தோடு எந்த ஒரு பருவ காலத்திலும் சமச்சீராக வளரச் செய்கிறது” என்ற கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை இவருக்கு வழங்கியுள்ளது. இந்தக் காப்புரிமை யானது 2017 ஏப்ரல் 27ஆம்  தேதியிலிருந்து 20 வருடங் களுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.எம். கதிரேசன், பதிவாளர் கே.சீதாராமன் ஆகியோர் புலமுதல்வரை அழைத்து வாழ்த்து தெரி வித்தனர்.

;