districts

நெல் கொள்முதல்: லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது

கடலூர், மார்ச் 30- நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த அழகுவேல் நெல் மூட்டைகளை தற்காலிக நேரடி கொள்முதல் நிலை யத்தில் விற்பனைக்காக கொண்டு வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய பருவ கால பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன் நெல் மூட்டைகளைகொள்முதல் செய்ய ரூ.10,000 கேட்டுள்ளார். இதனை யடுத்து லஞ்சம் ஒழிப்பு துறை யில் புகார் செய்திருக் கிறார். பிறகு, லஞ்ச ஒழிப்பு துறையின் அறி வுறுத்தலின்படி, பணத்தை கொடுத்தபோது லஞ்சம் வாங்கிய ஊழியர்களை கையும் களவுமாக  கைது செய்தனர். மேலும் கணக்கில் வராத பணத்தை யும் பறிமுதல் செய்து சிறை யில் அடைத்தனர்.