சிதம்பரம், ஜூலை 22- சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் வடகறி ராஜபுரம் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சிமெண்ட் சீட் உடைந்து குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது குறித்து வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தீக்கதிரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள உயர் அதிகாரிகள் உடனடியாக நட வடிக்கை எடுத்தனர். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட அதி காரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டனர். பிறகு, வடகறி ராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி செல்வமணிகண்டன் ஏற்பாட்டில், அங்கன்வாடி மையம் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டது. அடைந்த சிமெண்ட் கூரைகள் மாற்றப்பட்டன. மின்சாரம், குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.