districts

img

வனத்துறையினர் அலட்சியம்: ஆமைக் குஞ்சுகள் இறப்பு

கடலூர், மார்ச் 25- கடலூர் தேவனாம்பட்டி னத்தில் வனத்துறையின் அலச்சியத்தால் 500க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் இறந்துள்ளன. அரியவகை ஆலிவ்ரெட்லி ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஏப்ரல்  வரை கடற்கரையோரம் முட்டை யிட்டு செல்வது வழக்கம். முட்டைகளை நாய்கள், மருந்து உள்ளிட்ட விலங்கு கள் சாப்பிட்டு விடுவதால், அதனை வனத்துறையினர் உதவியுடன் சமூக வன ஆர்வலர் செல்லா சேகரித்து, பராமரித்து குஞ்சுள் பொறித்த பின்னர் பாதுகாப்பாக கடலில் விடுவது வழக்கம். இந்த ஆண்டில் இது வரைக்கும் 5,000க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சு கள் கடலில் விடடுபட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக வனத்துறையினர் சமுக வன ஆர்வலர் செல்லாவை அந்த பணியை மேற்கொள்ளக் என நிறுத்தி வைத்துள்ளனர். வனத் துறையினர் அலட்சியத்தால் ஆமைக்குஞ்சு பொரிப்ப கத்தில் இரண்டு நாட்களாக ஆமைக் குஞ்சுகள் கடலில் விடாமல் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (மார்ச் 25) காலை 500க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் வெளியே இறந்து கிடந்தது. கடற்கரையில் நடை பயணம் சென்ற பொது மக்கள் உயிருடன் இருந்த ஆமை குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்ட னர். ஆமைகளை பாதுகாக்க வும், ஆமைகளின் இன ப் பெருக்கத்தை அதிகரிக்க வும் தமிழக அரசு பெரு மளவில் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், கடலூர் வனத்துறையினர் அந்த நிதியை செலவு செய்யாமல் அலட்சியத்துடன் செயல் பட்டதாலேயே ஆமை குஞ்சு கள் இறப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.