districts

img

சிதம்பரத்தில் நாட்டியஞ்சலி விழா

சிதம்பரம், பிப். 19- சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42ஆவது ஆண்டு விழா தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசு கையில்,“பந்தநல்லூர் கிராமம் பரதநாட்டித்தின் பெரிய ஸ்தல மாகும். ஆனால், இப்போது அந்த ஊரில் நடனமாடுபவர்கள் யாரும் இல்லை. கிராமங்கள், நகரங்களில் நாட்டியம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தற்போது குறைந்து வரு கிறது. எனவே இதை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்” என்றார். நீதிபதிகள் ப.உ.செம்மல், கே.சக்திவேல், ஏ.உமாமகேஸ்வரி, சுகன்யா ஸ்ரீ, அறக்கட்டளை நிர்வாகிகள், ஏ.சம்பந்தம், ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், எம்.கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இந்த விழா 22 ஆம் தேதி நிறைவடைகிறது. நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1981ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு வரை நடை பெற்றது. திடீரென நடராஜர் கோயிலில் விழாவை நடத்த தீட்சி தர்கள் அனுமதிக்காததால் தெற்கு வீதியில் உள்ள வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.