சிதம்பரம், டிச.26- சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ.10 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை களுக்கான தீவிர சிகிச்சை பிரிவு களை துவக்கி வைத்தனர். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடனிருந்தனார். பின்னர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர் மன்ற நிர்வாகி களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,“ தற்போது தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதிய தாக தொடங்கப்பட்ட 6 மாவட்டங்க ளுக்கு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக தொடங்க வேண்டும்”என்றார். கடலூர் மாவட்டத்தில் முந்தைய திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப் பட்ட மருத்துவக் கல்லூரியை துவக்கு வதற்கு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மருத்துவக் கல்வியை தமிழில் பயிலும் வகையில் 13 பாடப் புத்த கங்களை மொழி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதனை டிச.16 அன்று சென்னையில் நடைபெறும் சர்வ தேச புத்தக கண்காட்சியில் முதல மைச்சர் வெளியிடுகிறார். அதே போல் பொறியியல் துறையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 10 புத்தகங்களையும் வெளியிடுகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.