சிதம்பரம், மே.15- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க வலியுறுத்தி மே 27 அன்று கம்மாபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார். நெய்வேலி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு, மாற்று இடத்திற்கான பட்டா வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும். மூன்றாவது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது. புதியதாக நிலம் கையகப் படுத்தினால் தற்போதைய சந்தை மதிப்பில் 4 மடங்கு அல்லது ஒரு கோடி ரூபாய் இதில் எது அதிகமோ அதைத் தர வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பு கட்டாய மாக வழங்க வேண்டும். மாற்று குடியமர்வுக்காக 5 சென்ட் நிலப்பட்டாவுடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்குரிய இழப்பீடும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மே 27 அன்று கம்மாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பால கிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.