districts

தடுப்புக்காவலில் சாராய வியாபாரி கைது

கடலூர், மே 28- கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜதாமரைப் பாண்டியன் அண்மையில் மாளிகம்பட்டு கிராமத்தில் சோதனை நடத்தினார். அப்போது, பெ.பத்மநாபன் வீட்டு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார். பிறகு, பத்மநாபனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில், அவர் மீது காடாம்புலியூர், பண்ருட்டி காவல் நிலையங்களில் 22 சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. எனவே இவரது குற்றச் செயலை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்புக்காவலில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, பத்மநாபனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.

;