கடலூர், மார்ச் 23- தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் எதுவும் தெரியாது என்று ஒற்றை வார்த்தையில் பல்டி அடித்தது ஏன்? என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி எழுப்பினார். கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் "புதியதோர் உலகு செய்வோம்" என்ற சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில் முன்னாள் முதலமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் தொடங்குகின்றேன் என்று ஜெயலலிதா சமாதியில் சத்தி யம் செய்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஆறு முகசாமி விசாரணை ஆணை யத்தின் கேட்கப்பட்ட பல்வேறு கேள்வி களுக்கு தெரியாது என்கின்ற ஒற்றை வார்த்தையை வைத்து சமாளித்துள்ளார். முந்தைய நிலையில் இருந்து அவர் இந்த அளவுக்கு பின்வாங்கியதற்கான காரணம் என்ன? என்று மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி எழுப்பினார். பாஜகவின் தூண்டுதலால் தான் ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கினார் என்று குற்றம் சாட்டிய அவர் பாம்பின் நிழலில் படுத்து தூங்குவதும், பாஜகவின் உறவும் ஒன்று என்று சாடினார். ஒன்றிய மாநில உறவு மோசமாக உள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றோம். மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ கத்தில் மதிப்பெண்கள் அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடை பெற்ற நிலையில் தற்போது நுழைவுத் தேர்வு வைத்து அதன் மூலமே சேர்க்கை நடக்கும் என்று கூறுவதை ஏற்கமுடியாது.
பொது வாக மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை முடிவு. பல மாநிலங்க ளில் ஆளுநர்களுக்கும் முதல்வர்க ளுக்கும் பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் உள்ளன இஸ்லாமிய பெண்கள் `ஹிஜாப் அணிவது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அநியாயமானது என்றும் சிறு பான்மை மக்களுக்கு எதிரானது தீர்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. அப்படி ஒரு தேர்தல் நடந்தால் அது தான் கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் மதுக்கூர் ராமலிங்கம் சுட்டிக்காட்டினார். இந்த கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.உதயகுமார், எஸ். ஜி. ரமேஷ்பாபு, வி.சுப்புராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, என். எஸ்.அசோகன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜெ.ராஜேஷ கண்ணன், ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம் நன்றி கூறினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது.