districts

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக: ஜாக்டோ ஜியோ உண்ணாநிலை போராட்டம்

கடலூர், மார்ச் 5- பழைய ஓய்கூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்  வாதார உரிமை மீட்பு உண்ணா நிலைப் போராட்டம் திரு வண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பார்த்திபன், எஸ்.முருகன், எம்.சுந்தர்ராஜ், எஸ்.பழனி, பி.மாரிமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரமேஷ்  பாபு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஏ.சபரிராஜ், நில அளவை ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ஜே.ராஜா, ஆசிரி யர் கூட்டணி மாநிலத் தலை வர் கே.பி.ரக்ஷித் ஆகியோர் பேசினர்.  அதேபோல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே ஒருங்கி ணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஆ.சீனிவாசன், ஜி.சீனிவாசன், சத்யகுமார், எம்.ஜெயகாந்தன் தலை மையில் நடைபெற்றது. இதில் பல்கலைகழக ஆசிரியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் அய்.இளங்கோவன், தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அ.சேகர், உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ், ஆசிரியர் காப்பாளர் உரிமை பாது காப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் துரை கருணாநிதி,  வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் ராமன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.கோபி, தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.சேகர் ஆகியோர் பேசினர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சு.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகா லிங்கம், பல்வேறு அமைப்பு களின் நிர்வாகிகள் எஸ்.கே.அனந்தகிருஷ்ணன், இரா.தாஸ், அ.லட்சுமிபதி, டி.ராமதாஸ், ஏ.ர`ஹீம். தங்க.மனோகரன், கா.சி.செல்வராசு, என்.ராமர், டி.சசிகுமார், ஜெ.சர்ச்சில், காரல்மார்க்ஸ், ஏ.கவிதா, விவிஜயராணி ஆகியோர் பேசினார். ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் ஒருங்கிணைப்பாளர் கள் சீ.சங்கர பெருமாள், ஜெ.ஸ்ரீதர், பா.பாலமுருகன், டி.விஜயராகவன், து. கார்த்தி கேயன், எஸ்.ஜோசப் கென்னடி, பாசெல்வகுமார் ஆகியோர் பேசினர். கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலர் ரா. தாஸ், நிர்வாகிகள் எல்.அரிகிருஷ்ணன், ரா.முரு கன், சி.ஜெகநாதன், மு. அம்பேத்கார், வி.குண சேகரன், க.மணவாளன் ஆகியோர் பேசினர்.