கடலூர், டிச.19- கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 3 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலா ளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் இ.முத்துக் குமார் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் என்.பி.நாகேந்தி ரன், துணைத் தலைவர் எஸ். தட்சிணா மூர்த்தி, துணை செயலாளர்கள் பி.பழனியம்மாள், இ.என்.ராஜகோ பால் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
கைத்தறி நெசவு தொழில் மற்றும் நெசவாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யவும் 1985 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் கைத்தறிக்கு 22 ரக ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு, 11 ரகமாக குறைக்கப்பட்டு இந்த ரகங்கள் மட்டும் கைத்தறியில் உற்பத்தி செய்ய வேண்டும். இந்த ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டது. சமீ பத்தில், இந்த சட்டத்தை மீறி விசைத் தறி உற்பத்தி கூடங்கள் செயல்படு கின்றன. சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசு கைத்தறி நெசவாளர் களுக்கு அமல்படுத்தும் நலத் திட்டங்கள் கூட்டுறவு நெசவாளர் களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படு கிறது. தனியார் நிறுவனங்களில் பணி புரியும் கைத்தறி நெசவாளர்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்தை அமல்படுத்துக!
தனியார் கைத்தறி நிறுவனங்களில் பணிபுரியும் நெசவாளர்களுக்கு, வேலையற்ற காலத்தில் நிவாரணம் கூலியுடன் கூடிய விடுமுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரக்கூடிய கைத் தறி நெசவாளர் நல சட்டம் தொழிற் சங்க இயக்கங்கள் கடுமையாக போராடி 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 38 ஆண்டுகளாக இன்றள வும் அவை சட்டமாகவே உள்ளன. இவற்றை அமல்படுத்த வேண்டும்.
நெசவாளர்களுக்கு வீடு கட்டுக!
வீட்டுமனை இல்லாத வாடகை வீட்டில் நெசவு செய்யும் நெசவாளர் களுக்கு வீட்டு மனையுடன் கூடிய வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இயற்கை சீற்றம், நிவா ரணம் மற்றும் மழைக்கால நிவாரணம் ரூ.5000 ரொக்கமாகவும், மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்டவைகள் ரேசன் கடை மூலம் வழங்க வேண்டும்.
25 விழுக்காடு போனஸ் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். கைத்தறி துணி உற்பத்தியில் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்.
கைத்தறி தொழில் சார்ந்த உடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ காப்பீடு கொண்டு வர வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் வாக்குரிமை வழங்கும் சட்ட திருத்தத்தையும் தமிழக அரசு கொண்டுவர வலியுறுத்தி வருகிற ஜனவரி 3 ஆம் தேதி தமிழ்நாடு முழுவ தும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.