districts

img

அரையும் குறையுமாக நிற்கும் வி.கே.சி. தேசிய நெடுஞ்சாலை பணி

கடலூர்,பிப்.9- விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை  கும்பகோணம் வழித் தடத்தில்  தேசிய நெடுஞ்சாலை பணி தொடங் கப்பட்டு 6 ஆண்டுகளை கடந்தும் முடிக்காமல் அறைகுறையாய் நிற்ப தால் பொதுமக்களும் வாகன ஓட்டி களும் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை கும்பகோணம் வழித் தடத்தில் 165 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்க ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கப் பட்டது. 2018 ஏப்ரல் முதல் பணி துவங் கப்பட்டது.  

2020-க்குள் முடிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு மக்கள் பயன் பாட்டுக்கு வரும் என்று ஒன்றிய அரசு  அறிவித்தது. சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட  பள்ளங்கள் மூடப்படவில்லை. பாலங்கள் கட்டுவதற்காக தொடங்கிய தூண் (பில்லர்) அமைக்கும் பணி யும் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அனைத்து பணி களும் ஆங்காங்கே அரைகுறையாய் நிற்பதால் சாலையை கடந்து செல்ல முடியவில்லை. விபத்துக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. உயிர் இழப்பும் அதிகரித்துள்ளது.  இந்த பணிக்கான ஒப்பந்ததாரர்கள்  பலமுறை மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் பணிகள் முடிக்கப்பட வில்லை. எனவே ஒன்றிய, மாநில  அரசுகள் இந்த சாலை பணியை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகே போராட்ட குழு சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

அமைப்பாளர் வி. முத்துவேல் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், எஸ். திருஅரசு, நகர செயலாளர் ஆர். பாலமுருகன், மாதர் சங்க நிர்வாகிகள் மேரி, மாதவி,   விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச்  செயலாளர் ஆர்.நீதி வள்ளல், தேமுதிக நகர செயலாளர் கே. வைத்திலிங்கம், திராவிட கழக மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, தவாக நகர தலைவர் ஜி.சிவசுப்பிரமணியம், மதிமுக மாவட்டச் செயலாளர் எம்.பிச்சை, சிபிஐ நிர்வாகி லாரன்ஸ் மற்றும் நெய்வேலி தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், வடலூர் நான்கு முறை சந்திப்பில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் எம்.பி. தண்டபாணி, நிர்வாகிகள் ஆர்.கே. சரவணன், எஸ்.எஸ். ராஜ், ஆர்.இளங்கோவன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கன்ற கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், நெல்லிக்குப்பம் பகுதிச் செயலாளர் எம்.ெஜயபாண்டியன், விவசாய சங்க துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பண்ருட்டியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. உதயகுமார் தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் ஆர். உத்திராபதி, நிர்வாகிகள் பாண்டு ரங்கன், ராஜேந்திரன், ஜீவானந்தம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காடம்புலியூரில் நடைபெற்ற மறிய லுக்கு பண்ருட்டி வட்டச் செயலாளர் எஸ்.கே. ஏழுமலை தலைமை வகித்தார்.  ஜெகதீசன், குமரகுருபரன், பூர்வ சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சோழத்தரம் மெயின் ரோட்டில் நடை பெற்ற சாலை மறியல் போராட்டத் திற்கு வட்டச் செயலாளர் பி.தேன்மொழி  தலைமை தாங்கினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவிச்சந்திரன்,  மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், வடக்க் குழு உறுப்பினர்கள் வெற்றி வீரன், தினேஷ், பாபு, பாண்டு ரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

சேத்தியாத்தோப்பு கடை தெருவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார், மாவட்டக் குழு  உறுப்பினர் பி. வாஞ்சிநாதன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் ஏ.செல்லையா, புவனகிரி ஒன்றிய செயலாளர் பி.ஜே. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.