சிதம்பரம், நவ. 14- சிதம்பரம் பேருந்து நிலை யத்தில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து சிதம்ப ரம் வழியாக மயிலாடுதுறைக்கு செல்லக்கூடிய கும்பகோணம் கோட்ட அரசு பேருந்து ஞாயிற்றுக் கிழமை (நவ. 13) இரவு 9 மணிய ளவில் சிதம்பரம் பேருந்து நிலை யத்திற்கு வந்தது. பேருந்தில் 10 பயணிகள் இருந்தனர். அப்போது பின்பிறம் உள்ள வலதுபக்க டயர் அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது. சத்தம் கேட்டு பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி விட்டனர். டயர் வெடித்ததும் சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பிடித்து ஏரியத் தொடங்கியது. இதையடுத்து உடனடியாக அரு கில் இருந்த பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டன. இது குறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். டயர் வெடித்து பேருந்து எரிந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.