districts

img

புதுப்பாளையத்தில் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல்

கடலூர், ஜூன் 27 - கடலூர் புதுப்பாளை யத்தில் மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் மதிப்பில்  அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடை பெற்றது. விழாவிற்கு மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியை நாச்சியார், மண்டல குழு உறுப்பினர் பிரசன்னா, கவுன்சிலர் அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இதில்  மாநக ராட்சி உறுப்பினர்கள்,  தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, பொறியாளர் ரகுராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட கலந்து கொண்டனர்.