districts

சிறுமிக்கு கட்டாய திருமணம்:  4 பேர் கைது

கடலூர், மார்ச் 18- கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் விசூரைச் சேர்ந்தவர் சிலம்ப ரசன் மனைவி அகல்யா (21). இவரது தங்கையான 15 வயது சிறுமியை கட லூர் முதுநகர் சிப்பாய் தெருவைச் சேர்ந்த குணே சகரன் மகன் கருணைஜோதி (28) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியை அவரது தாய்-தந்தை ஆகியோர் உதவியுடன் மேல் மலையனூருக்கு கடத்திச் சென்று அங்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து சகோதரி தனது தாய்-தந்தைகளிடம் கேட்டபோது திருமணம் செய்துக் கொண்ட கருணைஜோதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அகல்யாவை மிரட்டி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர் கட லூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருணைஜோதி, அவரது தந்தை மா.குணேசகரன் (62),மற்றும் சிறுமியின் தாய்-தந்தை ஆகியோரை கைது செய்தனர். சிறுமியை மீட்டு கடலூரிலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.