கடலூர், மார்ச் 11- 100 நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், கார்குடல் கிராம மக்களுக்கு 100 நாள் வேலையில்லை என்று திருப்பி அனுப்பியதை கண்டித்தும், பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி வேலை வழங்குவதை மறுக்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், துணைத் தலைவர் பி.வீரமணி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், நிர்வாகிகள் எஸ்.மணி. கே.ஜெயக்குமார், சங்க நிர்வாகிகள் கே.ஆதிமூலம், காளி.கோவிந்தராஜன், குறிஞ்சிப்பாடி செயலாளர் வெங்கடேசன், கலைச்செல்வன் (வாலிபர் சங்கம்), மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கு.தமிழ்மணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.