districts

img

தலித் மக்கள் மீது பொய் வழக்கு: திரும்பப் பெற வலியுறுத்தல்

சிதம்பரம், மார். 17- சிதம்பரத்தில் தலித் மக்கள் மீது போடப் பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்  பாட்டம் நடை பெற்றது. கடலூர் மாவட்டம், புவன கிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் மாசி மகத் திருவிழாவின்போது தலித் சமூக மக்களுக்கும் மாற்று சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிதம்ப ரத்தில் வெள்ளியன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செய லாளர் சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு உரை யாற்றுகையில், “திருவிழா வின் போது நடந்த மோத லில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது காவல்துறை பதிவு செய்துள்ள பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும்”என்றார். காவல்துறையினர் அநீதிக்கு துணைபோகா மலும் சாதிய ரீதியாக செயல்படாமலும் இரு சமூகத்திற்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கடலூர் மாவட்டத்தில் தொடரும் தலித் மக்கள் மீதமான தாக்குதல்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் உரிய நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாமு வேல்ராஜ் வலி யுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வாஞ்சிநாதன், தலைவர் ராஜேஷ் கண்ணன், பொருளாளர் சுப்புராயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பிரகாஷ் (விதொச), பழனிவேல் (சிஐடியு), சரவணன், வினோத் குமார் (வாலிபர் சங்கம்), மல்லிகா (மாதர் சங்கம்) உள்ளிட்டோரும் பேசினர்.