சிதம்பரம், பிப்.17- அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கல்வியியல் புல பயிற்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகத்தின் மூலம் கல்வியியல் துறை மாணவர்க ளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். விவேகானந்தா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிக்கு 28 மாணவர்கள் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் வாழ்த்து கூறினார். இதில் கல்வியில் புல முதன்மையர் குலசேகர பெருமாள், இயக்குநர் கிருஷ்ணசாமி, அலுவலர் ஆண்டாள், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.