கடலூர், ஜூன் 28- கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற் கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். கே.சரவணன் மாவட்ட நிர்வாகி கற்பனைச் செல்வம், விவசாய சங்க நிர்வாகிகள் மகா ராஜன், பாலு, ரவீந்திரன் உள்ளிட்ட ஏராள மான கலந்து கொண்டு பேசினர்.
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது,
திட்டக்குடி பகுதியில் வெலிங்டன் ஏரியை வெட்டிய வெலிங்டன் பிரபுவுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும், மேலும் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் திட்டக்குடியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட அரசு ஆண்கள் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்கவேண்டும், வெயிலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் முந்திரி மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் எஸ்.புதூர், எம்.புதூர் பகுதி யில் உள்ள மலைகளில் செம்மண் கிராவல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இத னால் அந்த இடங்களில் மரங்கள் நட்டு பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தையில் வாக னங்கள் நிறுத்த இடவசதி இன்றி சாலை யில் நிறுத்த வேண்டி உள்ளது.
நத்தம், சேமகோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏரி, வாய்க்கால்களை உரிய அளவீடு செய்து அதனை தூர்வார வேண்டும் பெண்ணாடம் அடுத்த தொளார் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட விவ சாயிகளுக்கு இதுவரை உதவி தொகை கிடைக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதனால் கிசான் திட்டத்தில் உதவி தொகை கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு ஆட்சியர் விவசாயிகள் விண்ணப்பித்த விண்ணப்பங்களின் நிலை குறித்து தகவல் அளிக்க வேண்டும். மேலும் தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து விவசாயிகள் பலர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.