districts

img

கல்லூரி மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம்

சிதம்பரம், செப் 23- காட்டுமன்னார் கோவிலில் இயங்கி  வரும் அரசு கலைக் கல்லூரி பயிலும் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். ஆனால் பல பேருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை. இந்நிலையில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், ஆய்வாளர் விமலா ஆகியோர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கல்லூரியில் உள்ள ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர். ஓட்டுநர் உரிமம் பெற தகுதியான 48 மாணவர்களுக்கு இணைய வழி மூலம் பணம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை தயக்கமில்லாமல் ஓட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 48  பேருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து வட்டார அலுவலர் மற்றும் ஆய்வாளர் ஓட்டுநர் உரிமத்தை மாணவர்களுக்கு வழங்கினர்.

;