districts

img

வேலை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர்கள், பணியாளர்கள் போராட்டம்

கடலூர், ஜன. 29- அம்மா மினி கிளினிக் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள், பணி யாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து கடலூரில் சனிக்கிழமை (ஜன. 29) போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் சிற்றூராட்சிகளில் அம்மா மினி கிளினிக் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்திற்கு 66 மருத்துவமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தலா ஒரு மருத்துவர், பல்நோக்கு மருத்துவப் பணியாள ரோடு இந்த மருத்துவமனை இயங்கப்ப டும் என்று அறிவிக்கப்பட்டு அதற்காக மருத்துவர்கள், பல்நோக்குப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மே மாதம் முதல் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த மருத்துவமனைகள் செயல்பட வில்லை எனக் கூறி அதனை மூடுவதற்கு உத்தரவிடப் பட்டது. எனினும், பணியாற்றி வந்த மருத்துவர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்புப் பணி பணிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் மாற்றப்பட்டு பணி யாற்றி வந்தனர்.

கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து இவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில் அவர்களின் பணிக்காலம் நிறைவடைந்து விட்டதாகவும், பணிக்கு வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் துணை இயக்குநர் அலுவலகத்தில் குவிந்த னர். அப்போது தங்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்றும், நவம்பர் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.