தில்லியில் போராடிய விவசாயிகளிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கடலூர் ஜவான் பவன் அருகில் மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், ஆர்.ராமச்சந்திரன், கற்பனைச் செல்வம், வெங்கடேசன் (விவசாயி சங்கம்), கே.எஸ்.ராஜா (திமுக), வழக்கறிஞர் சந்திரசேகரன்(காங்கிரஸ்), பாலு (மக்கள் அதிகாரம்) பி.கருப்பையன் (சிஐடியு), ஆர்.அமர்நாத் (சிபிஎம்), டி.கிருஷ்ணன் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.