கடலூர், பிப். 7- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தி லுள்ள சாத்துக்கூடல் கிரா மத்தில் தலித் இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்கு தல் நடத்தியதை கண்டித் தும், பலியான முதியவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த கருவேப்பிலங் குறிச்சி காவல்துறையை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விருத்தாசலத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பி.செந்தில் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் பழ.வாஞ்சி நாதன், மாவட்டத் தலை வர் ஜே.ராஜேஷ் கண்ணன், சி.பி.எம் வட்டச் செயலா ளர் என்.எஸ்.அசோகன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச் சந்திரன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், நிர்வாகிகள் சந்திரசேகரன், திருமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன் விசிக நிர்வாகி திருமாறன் ஆகி யோர் பேசினர். பாதிக்கப்பட்ட இளை ஞர்களுக்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பேபெற வேண்டும், பலி யான கோதண்டம் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையினர், விசாரணை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலை வர்கள் வலியுறுத்தினர்.