கடலூர், மார்ச் 31- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தினசரி காய்கரி மார்க்கெட்டில் உள்ள கட்டணக் கழிப்பறையை உடனே திறக்க வேண்டும், முறையாக தினசரி குடிநீர் வழங்க வேண்டும், காய்கறி மார்க்கெட் அருகே சாலை விரிவாக்கத்தின் போது தோண்டப் பட்ட கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்கெட் கிளைச் செயலாளர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். இதில் வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.கலைச் செல்வன், மார்க்கெட் சேகர், சத்தியா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண கழிப்பறை உடனடியாக திறக்கப் படும் என்றும், முறையாக குடிநீர் வழங்கப் படும் என்று உறுதியளித்தார்.