கடலூர், மே 31- பொது விநியோகத்தை திட்டத்தை பலப்படுத்தக் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழி லாளர் சங்கத்தின் (சிஜடியு) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் டிஎன்சிஎஸ்சி அருகே நடைபெற்றது. டிஎன்சிஎஸ்சி வசம் உள்ள ரேசன் கடை களை கூட்டுறவு துறைக்கு மாற்றுவதையும், பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலதாமதம் செய்வதைக் கண்டித்தும், கொள்முதலில் உள்ள குளறுபடிகளை களைய வலியுறுத்தியும் சுமைப்பணியை அவுட்சோர்சிங் விடும் முடிவையும், நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டலத் தலைவர் ஜி.ராஜ்குமார் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், மண்டலச் செயலாளர் ஆர்.இளங்கோ, பொருளாளர் ஜெ.மணிவண்ணன், துணைத் தலைவர்கள் பி.உத்தரகுமார், எம்.நாகப்பன், துணைச் செயலாளர்கள் எம்.செங்குட்டுவன், தில்லைகோவிந்தன், ராஜா, துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.