கடலூர்,மார்ச் 15- கடலூர் பேருந்து நிலை யத்தை எம்.புதூருக்கு மாற்றுவதை கண்டித்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாநகர பேருந்து நிலையத்தை எம்.புதூர்ருக்கு மாற்றும் மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவு படுத்த வேண்டும், கொண்டங்கி ஏரியை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தை கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போர் சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கி னார். திலகர், ரமேஷ் (காங்கிரஸ்), வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்அமர்நாத், தட்சிணாமூர்த்தி (சிபிஎம்), திருமார்பன் (விசிக), மூர்த்தி (மநீம), ெஜ. ராமலிங்கம், சேகர் (மதிமுக), நாகராஜ் (சிபிஐ) ரஹீம் (தமுமுக), நஸ்ருதீன் (இஸ்லாமிய கூட்டமைப்பு), மாதவன் (திக), தேவநாதன், ரங்கநாதன் (குடியிருப்போர் நலச் சங்கம்) பாலு (மக்கள் அதிகார மையம்), ரவி (பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு), குரு (தனியார் போக்குவரத்து), சுப்புராயன் (மீனவர் பேரவை) அருள்ஜோதி (திருவள்ளுவர் பேரவை), சுகுமாரன் (நடைபாதை சங்கம்), எஸ்.கே.பக்கிரான் (மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.