districts

img

நெல் கொள்முதல் நிலையத்தில் 50 ஆயிரம் மூட்டைகள் சேதம்

கடலூர், மே 14- திட்டக்குடி பகுதியில் பெய்த திடீர் மழையால் நெல் கொள்முதல் நிலை யத்தில் 50 ஆயிரம் மூட்டை கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் திட்டக் குடி அருகே மருதாத்தூர் கிராமத்தில் குறுவை சாகுபடி யில் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள மருதாத்தூர், இறப்பா வூர், மேலூர், சிறுமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத் திலிருந்து 50 ஆயிரம் நெல்  மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய காத்திருக் கின்றனர். விவசாயிகளின் நெல் மூட்டைகளை அரசு  நேரடி கொள்முதல் நிலையத் தில் முறையாக கொள்முதல் செய்யாமல் குறைந்த அளவே கொள்முதல் செய்து வருகிறது. இதனால் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் அதி காலை பெய்த திடீர் மழை யால் 50 ஆயிரம் நெல் மூட் டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் ஈரப் பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.