districts

கடலூர்  அருகே சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்

 கடலூர்,ஏப்.3- தீவிபத்தில் சமையல் எரிவாயு  சிலிண்டர் வெடித்து வீட்டின் முன்பகுதி முழுவதும் தரைமட்டமானது. கடலூர் அருகே கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 50). ஞாயிறன்று காலை வழக்கம் போல் கியாஸ் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீ பரவியது. அதிர்ச்சி அடைந்த திலகவதி தீயை அணைக்க முயற்சி செய்து முடியாததால் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தார். அப்போது  பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதனை தொடர்ந்து தீ விபத்தில் வீட்டின் முன்பகுதி முழுவதும் தரைமட்டமானது,  தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இதில் காயமடைந்த திலகவதியை உடனடியாக மீட்டு தங்களது தீயணைப்புத் துறை வாகனத்தில் ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.