கடலூர், ஏப். 12- கடலூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட உள்ள சொத்து வரியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.வாலண்டினா, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் ஆகியோர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையர் விஸ்வ நாதன் ஆகியோரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரி விக்கும் போது ஒன்றிய அரசு உள்ளாட்சி அமைப்புகளில், ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் உதவி கள் பெற வேண்டும் எனில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள தாக கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு அநியாயமானது மட்டுமின்றி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் உரிமைகளில் தலையிடு வதாகும். ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டுமே தவிர, அதற்காக சொத்து வரியை உயர்த்த வேண்டும் என முன் நிபந்தனை விதிப்பது முறையல்ல. ஒன்றிய அரசின் இந்த அதிகார வரம்பு மீறிய செயலை மாநில அரசு கண்டிப்பதற்கு மாறாக அதனை செயல் படுத்த முன்வந்திருப்பதும், அதன் மூலம் மக்களின் வரிச்சுமையை அதிகரிப்பதும் ஏற்க இயலாததாகும். தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் பிரிவு 78இன்படி அனைத்து வரிகளை யும் தீர்மானிக்கும் அறிகாரம் அந்தந்த மன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள நிலை யில் அந்த மன்றங்களுக்கு சம்மந்த மில்லாமல் மாநில அரசே சொத்து வரி விகிதங்களை உயர்த்தி தீர்மானித்திருப்பது உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களை மதிக்காத செயல் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம், அரசு ஆணை பிறப்பித்த பிறகு மாநகராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற கூறியிருப்பது கண் துடைப்பாகும். எனவே சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்து தங்களின் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம். ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றாலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மீள முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். ஒன்றிய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை கண்மூடித்தனமாக உயர்த்தி கொண்டுள்ளது. மேலும் அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, வேலையின்மை போன்ற பல நெருக்கடிகளால் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் தலையில் மேலும் சுமையை அதிகரிக்கும் வகை யில் சொத்து வரி உயர்வை அறிஉ வித்துள்ளது எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே. தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி விகிதாச்சார உயர்வினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.