districts

img

சிபிஎம் போராட்டம் எதிரொலி சிதம்பரம் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கம்

சிதம்பரம், டிச. 30- சிதம்பரம் அருகே நஞ்சமகத்து வாழ்க்கை கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து கடந்த 4  ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாண வர்கள், வேலைக்கு செல்வோர் என  அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் டிசம்பர் 30ஆம்  தேதி சாலை மறியல் போராட்டம்  நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதனையடுத்து, சிதம்பரம் வட்டாட்சியர் அரிதாஸ் தலை மையில் போக்குவரத்து அதி காரிகள் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது, தினசரி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதிளித்தனர். இதனை ஏற்று சாலை மறியல் போராட்டம் தற்கா லிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பி னர் வாஞ்சிநாதன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார், விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் ஜீவா உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.