சிதம்பரம், ஏப்.12- சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் கடலூர் கோன்டூர் பகுதியை சேர்ந்த திருநங்கை நா.ரக்ஷிதா சரத்குமார் முனைவர் பட்டம் பயில விண்ணப்பித்துள்ளார். அவருக்கு திருநங்கை என்ற காரணத்தால் இடம் மறுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர் மன்ற துணைத்தலைவர் எம்.முத்துக்குமரன் ஆகியோர் திருநங்கை ரக்ஷிதாவை அழைத்துக்கொண்டு பல்கலைக் கழக துணை வேந்தரை சந்தித்து மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழக நிர்வாகம் திருநங்கை ரக்ஷிதாவுக்கு வேதியல்துறையில் முனைவர் பட்டம் பயில அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவரது படிப்பிற்கு உதவி புரிந்த துறைத் தலைவர் ஜெயபாரதி உள்ளிட்டவர்களை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் எஸ்.ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.முத்துகுமரன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.