districts

img

புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பொது நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சக்ரா அவென்யூ பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் க.பழனி தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் தமிழ்செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன் இளநிலை பொறியாளர் கணேஷ், தொழில்நுட்ப உதவியாளர் ெஜஸ்டின் ராஜா, வார்டு உறுப்பினர் சபரிராஜன், குடிநீர் திட்ட பணியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.