கடலூர்,மே.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் தலைமை பொது மேலாளருமான தோழர் எம்.என். எஸ்.வெங்கட்ராமன் படத்திறப்பு நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தோழர் வெங்கட்ராமனின் படத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி திறந்து வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.