சிதம்பரம், பிப். 24- சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா கண்காட்சி தாளாளர் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர்கள் பார்த்தசாரதி, கண்ணப்பன், துணை பேராசிரியர் கலைச்செல்வன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகி யோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இதில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், விக்ரம் சாராபாய் ஆகி யோர்களின் வேடமணிந்து மாணவர்கள் அஸ்வின், ஆசிப் அலி, மகேஸ்வரன், தீபக் ஆகியோர் வரவேற்றனர். பள்ளி மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில் பள்ளியின் முதல்வர் ரூபியல் ராணி, துணை முதல்வர் அறிவழகன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் போனிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.