சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தியல் துறை இறுதியாண்டு மாணவர்கள், கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிள்ளை பேரூராட்சி மன்றம் இணைந்து கிள்ளை பகுதிகளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரவீந்தரன், மருத்துவர் சிவக்குமார், பேராசிரியர் தனபால், மன்ற உறுப்பினர்கள் குமார், யாஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.