districts

img

நெல்லிக்குப்பத்திலிருந்து புறப்பட்டது சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி

கடலூர், அக். 28- சிஐடியு மாநில மாநாட்டை யொட்டி சிஐடியு ஸ்தாபக தலை வர்களில் ஒருவரான தோழர்சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி பயணம் நெல்லிக்குப்பத்தில் அவரது நினைவிடத்திலிருந்து புறப்பட்டது. சிஐடியுமாவட்டத் தலைவர் டி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவு ஜோதியை மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் எடுத்துக் கொடுக்க பயண குழு வின் தலைவரும் மாநில துணைத் தலைவருமான பி.கருப்பை யன் பெற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்டத் தலை வர் எஸ்.முத்துக்குமரன், கள்ளக் குறிச்சி மாவட்டப் பொருளாளர் ஏ.வீராசாமி, அரியலூர் மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, அரிய லூர் மாவட்டத் தலைவர் கே. கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.ஆர். ஆர்.ஜீவானந்தம், வி.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணைத் தலை வர்கள் வி.சுப்புராயன் கே. சாவித்திரி, மாவட்ட இணைச் செயலாளர்கள் என்.தேசிங்கு ஏ.பாபு, மாவட்டக் குழு உறுப்பி னர் ஜெயபாண்டியன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ரேவதி, மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் வி.கலியமூர்த்தி, இணைச் செய லாளர் டி.தனசேகரன், வி.ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பயணக்குழு கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விழுப்புரம், கள்ளக் கறிச்சி, அரியலூர், பெரம்ப லூர் மாவட்டம் வழியாக நாகர் கோவிலை சென்றடைகிறது.