districts

img

சிதம்பரம் வாய்க்காலில் மிதந்த இளைஞர் சடலம்

சிதம்பரம், டிச. 7- சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பாலமான் வாய்க்காலில் புதன்கிழமை காலை ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், அவர் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (37) என்றும், சிதம்பரம் நகரத்தில் உள்ள குமரன் தெருவில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்தது தெரியவந்தது. மேலும் இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வலிப்பு ஏற்பட்டு வாய்க்காலில் விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து வாய்க்காலில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.