districts

தென்பெண்ணையாற்றில் படகுகளுக்கு தீவைப்பு

கடலூர், மார்ச் 2- கடலூர் ஆட்சியர் அலு வலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. இங்கு படகு மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். கட லூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினசரி தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம். இவர்கள் தங்க ளது படகுகளை ஆற்றின் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றனர்.  மறுநாள், அந்த பக்கம் சென்ற மற்ற பகுதி மீன வர்கள் படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்கள் பார்த்த னர். அப்போது, சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து சேதமானதாகக் கூறினர்.  பிறகு, இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.