கடலூர், ஜன. 28- தமுஎகச கடலூர் மாவட்ட முன்னாள் தலைவர் ஆறு.சேகர் வெள்ளியன்று (ஜன. 28) கால மானார். இவர் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் பண்ருட்டி வட்டச் செயலாளராகவும்,தமுஎகச முன்னாள் மாவட்டத் தலை வராகவும், பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளராகவும் திறம்பட செயல்பட்டவர். பொது சுகாதாரத் துறையில் அண்ணா கிராமம் ஒன்றியம் ஒறையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றி கடந்த 2018ஆம் ஆண்டு பணி ஒய்வு பெற்றார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், பி.கருப்பையன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்ணன், ஆர்.ஆளவந்தார், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் எல்.அரிகிருஷ்ணன், தமுஎகச தலைவர் கவிஞர் பால்கி உள்ளிட்ட ஏராளமானோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவ ரது உடல் வெள்ளியன்று(ஜன.28) கம்மியம்பேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.