districts

img

நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர், ஜூன் 11-  நுண் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜுடம் மனு  அளித்த னர்.  மனுவின் விவரம் வரு மாறு, நுண்நிதி நிறுவனங்கள் நகர்ப்புற, கிராமப்புற பெண்களுக்கு கடன் தொகையை வழங்கி வரு கின்றனர்.

இவ்வாறு கடன் வழங்கும்போது எந்தவித வரையறையும் இன்றி அதிக வட்டியும், கடன் செலுத்தும் முறையின் விதிமுறைகள் குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடாமல் சாதாரண ஏழை எளிய பெண்களின் வறுமையை பயன்படுத்தி வருகின்றனர். கடனை வழங்கி திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ள பெண்கள் மீது உளவி யல் ரீதியான தாக்குதலை யும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிறுவனங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

கடனை அடைப்பதற்கு கந்து வட்டியை நோக்கி செல்லும் அபாயகரமான நிலையும் உள்ளது. ரிசர்வ் வங்கியின் எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் கடன் வழங்கு வதும், வசூலிக்க ரவுடி களை ஏவி விடுவது போன்ற செயலில் ஈடுபடும் நுண் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுண் நிதி நிறுவனங் களை முறைப்படுத்த மாவட்ட அளவில் அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும், புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.மாதவி, மாநில செயற்குழு உறுப்பினர் வி.மேரி, மாவட்டப் பொரு ளாளர் எஸ். ரேவதி, துணைச் செயலாளர் எம்.ஜெயசித்தரா, நகர செயலாளர் எம்.மனோ ரஞ்சிதம், நகர தலைவர் எஸ்.சாந்தகுமாரி பொருளாளர் கே.அனுசாரதி ஆகியோர் கொண்ட குழு இந்த மனுவை அளித்தது.