districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

கடலூர்,ஜன.31- புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் மனிதமலத்தை கலந்த சாதி ஆதிக்கவெறியர்களை கைது செய்திட கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கடலூர் ஜவான்ஸ்பவன் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலை வர் ஜெ.ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார். நிறைவாக தீண்டாமை முன்னணியின் மாநில துணை தலைவர் ஜி.ஆனந்தன் பேசினார்.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பழ. வாஞ்சிநாதன், நிர்வாகிகள் டி.பழனிவேல்,பி.கருப்பையன், வி.சுப்பராயன், ஆர்.அமர்நாத், தண்டபாணி, திருமுருகன், டி.கிருஷ்ணன் பி.வெங்கடேசன், எஸ்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.