கடலூரில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக சிறுமிகள் சுமிதா, பிரியா, மோனிகா, சங்கீதா, பிரியதர்ஷினி, கவிதா மற்றும் இளம்பெண் நவநீதா ஆகிய 7 பேர் சென்றுள்ளனர்.
அப்போது தடுப்பணையில் அருகே ஏற்பட்ட சூழலில் ஆழமான பகுதியில் 2 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை காப்பாற்ற சென்ற 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதை்கண்ட அக்கம்பக்கத்தினர் 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம்பெண் ஒருவரும் தடுப்பணை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளன.
கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில் இவர்கள் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.