districts

img

குடும்பத்தகராறில் 4 பேர் எரித்து கொலை கடலூர் அருகே கோரச்செயல்

கடலூர், பிப்.8- குடும்பத்தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து 2குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். கடலூர் செல்லங்குப்பம், வெள்ளிப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வர் பிரகாஷ் (வயது 35). இவரது மனைவி தமிழரசி (31). இவர்களுக்கு ஹாசினி என்ற 4 மாத குழந்தை உள்ளது. தமிழரசியின் தங்கை தனலட்சுமி, இவரது கணவர் சற்குரு. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரண மாக  கடலூர் தேவனாம்பட்டி னத்தில் வசித்து வரும் சற்குருவிற்கும், தன லட்சுமிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில்  செவ்வாயன்று இரவு தன லட்சுமி அவரது அக்கா தமிழரசி வீட்டிற்கு வந்தார். இதன் பின்னர் புதனன்று காலை பிரகாஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமியிடம் சற்குரு போனில் பேசினார். பின்னர் சற்குரு நேரில் வந்து தனலட்சுமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.  உடனே சற்குரு தான் வந்த மோட்டார் சைக்கி ளில் இருந்த பெட்ரோலை எடுத்து வீட்டில் இருந்த வர்கள் மீது ஊற்றிவிட்டு வீட்டை பூட்டி தீ வைத்தார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் தீயினால் புகை மண்டலமாக காணப்  பட்டது. இந்த கோரசம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கடலூர் முதுநகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த  காவல்துறையினர் ஆபத்தான நிலையில் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.   இந்த தீ விபத்தில் தமிழரசி அவரது குழந்தை ஹாசினி, மற்றும் தனலட்சுமியின் 6 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலே பரிதாப மாக இறந்தது. மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த சற்குரு மருத்துவமனை சேர்க்கப்பட்டு உயிரி ழந்தார். சற்குரு மனைவி தனலட்சுமி, தனலட்சுமியின் தாய் செல்வி ஆகி யோரை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர மாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.