யில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் பெய்த கன மழைக்கு, ஆயிரம் ஏக்கரில் பயி ரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அடி யோடு சாய்ந்து சேதம் அடைந்த தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலூர் சுற்றியுள்ள மலை கிராமங்களில் வாழை மரங்கள் சாய்ந்தது. கடலூரை அடுத்த வழி சோதனை பாளையம், ராமா புரம், புதுக்கு குப்பம், வெள்ளக் கரை, ஒதியடிக்குப்பம், சின்ன தானாங்குப்பம், புலியூர் , சமட்டிக்குப்பம், உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ள னர்.
தற்போது வாழைத்தார் அறு வடைக்கு தயாராக இருந்த நிலை யில், சூறைக்காற்றுக்கு இறையாகி சாய்ந்து கிடக்கும் வாழை மரங்களை பார்த்த விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடலூர் வழி சோதனை பாளையம், ராமாபுரம் என 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கரில் வாழை பயிரிட்டு பிள்ளைகளைப் போல் பாதுகாத்து வளர்த்து வந்தோம். ஒரே நாள் காற்றில் அனைத்து மரங்களும் சாய்ந்துவிட்டது.
ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.